திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்திற்குட்பட்ட ராஜா பவுண்டரி 2 வீதிகளில் சுமார் 2000 மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் பல நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதாகவும், சாக்கடையை சரிவர சுத்தம் செய்யாததால் கொசுத் தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசுவதாகவும் மேலும் தெருவிளக்குகள் கேட்டு பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் கோரிக்கைகள் தீர்க்கப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்திற்குட்பட்ட ராஜா பவுண்டரி 2 வீதிகளில் சுமார் 2000 மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் பல நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதாகவும், சாக்கடையை சரிவர சுத்தம் செய்யாததால் கொசுத் தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசுவதாகவும் மேலும் தெருவிளக்குகள் கேட்டு பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் கோரிக்கைகள் தீர்க்கப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.