கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே போதிய வருமானம் இல்லாமல் மன விரக்தியில் வாடகை கார் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே போதிய வருமானம் இல்லாமல் மன விரக்தியில் வாடகை கார் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார்(42), இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 12 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். ரவிக்குமார் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ரவிக்குமார் நீலகிரி தைலத்தை குடித்துவிட்டு மயக்கம் அடைந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரவிக்குமாரின் உடல்நிலை மோசமானதால் நேற்று ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்த ரவிக்குமார் கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று காரணமாக கார் தொழிலில் சரியான வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாகவும், இதனால் மன விரக்தியில் இருந்த ரவிக்குமார் நீலகிரித் தைலம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இறந்த ரவிகுமாரின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார்(42), இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 12 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். ரவிக்குமார் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ரவிக்குமார் நீலகிரி தைலத்தை குடித்துவிட்டு மயக்கம் அடைந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரவிக்குமாரின் உடல்நிலை மோசமானதால் நேற்று ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்த ரவிக்குமார் கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று காரணமாக கார் தொழிலில் சரியான வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாகவும், இதனால் மன விரக்தியில் இருந்த ரவிக்குமார் நீலகிரித் தைலம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இறந்த ரவிகுமாரின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.