கோவை: வால்பாறையில் சாலை பராமரிப்பு பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.
கோவை: வால்பாறையில் சாலை பராமரிப்பு பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் சாலையில் உள்ளது தாய் முடி எஸ்டேட்.
இந்த சாலை வழியாக முடிஸ், நல்லமுடி ஹைபாரஸ்ட் போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சாலை தேயிலைத் தோட்ட நிர்வாகத்திடம் இருந்து நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை டெண்டர் விட்டு சாலை தோண்டப்பட்டு பணியை துவங்கியது.

சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட உடன் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது. நிறுத்தப்பட்ட பணிகள் பல மாதங்கள் கடந்தும் இன்னும் தொடங்கப்படாததால் சாலையில் நடந்து செல்ல இயலாத நிலையும் வாகனம் செல்லும் போது மிகுந்த கஷ்டப்பட்டு செல்கின்றனர். சில சமயங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக பணியை துவங்கி முடிக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் சாலையில் உள்ளது தாய் முடி எஸ்டேட்.
இந்த சாலை வழியாக முடிஸ், நல்லமுடி ஹைபாரஸ்ட் போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சாலை தேயிலைத் தோட்ட நிர்வாகத்திடம் இருந்து நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை டெண்டர் விட்டு சாலை தோண்டப்பட்டு பணியை துவங்கியது.
சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட உடன் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது. நிறுத்தப்பட்ட பணிகள் பல மாதங்கள் கடந்தும் இன்னும் தொடங்கப்படாததால் சாலையில் நடந்து செல்ல இயலாத நிலையும் வாகனம் செல்லும் போது மிகுந்த கஷ்டப்பட்டு செல்கின்றனர். சில சமயங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக பணியை துவங்கி முடிக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.