கோவை: வால்பாறை அருகே சிறுவனை தாக்கிய சிறுத்தை இரண்டு வாரங்களாகியும் பிடிபடாததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே சிறுவனை தாக்கிய சிறுத்தை இரண்டு வாரங்களாகியும் பிடிபடாததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் இரண்டு வாரங்களுக்கு முன் சிறுவன் ஒருவன் சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்தான்.

இந்நிலையில், சோலையார் எஸ்டேட் பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை அடுத்து சிறுவன் தாக்கப்பட்ட இடத்திலும், மற்றொரு இடத்திலும் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க. வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும், 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், இரண்டு வாரங்களை கடந்தும் சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் சிக்காமலும் கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் இரவு பகலாக அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் இரண்டு வாரங்களுக்கு முன் சிறுவன் ஒருவன் சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்தான்.
இந்நிலையில், சோலையார் எஸ்டேட் பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை அடுத்து சிறுவன் தாக்கப்பட்ட இடத்திலும், மற்றொரு இடத்திலும் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க. வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், இரண்டு வாரங்களை கடந்தும் சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் சிக்காமலும் கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் இரவு பகலாக அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.