கோவை: பொள்ளாச்சி அருகே செமனாமபதி பகுதியில் கேரளா கழிவுகளை கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: பொள்ளாச்சி அருகே செமனாமபதி பகுதியில் கேரளா கழிவுகளை கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி கிராமத்தில் இரட்டை மடை என்ற பகுதியில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டனி ஜோஸ் என்பவரது தோட்டத்தில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருந்து ஏராளமான கழிவுகள் கொண்டுவந்து கொட்டுவதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் 3 டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட கழிவுகளை, பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி மர்ம நபர்கள் கொட்டி வந்தனர்.
அப்போது, அங்கு சென்ற விவசாயிகள் லாரிகளை சிறைபிடித்து விசாரித்த போது மர்ம நபர்கள் தப்பி ஓடினர். பின்னர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை கைப்பற்றி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த தோட்டத்து உரிமையாளர், ஆண்டனி ஜோசை தேடிவருகின்றனர்.

கேரளாவிலிருந்து அடிக்கடி இது போன்ற கழிவுகளை கொண்டு வந்து விவசாய நிலங்களில் கொட்டி வருவதால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர் எனவும், கேரள எல்லைப் பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடிகளில் முறையான கண்காணிப்பு பணி நடைபெறுவதில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி கிராமத்தில் இரட்டை மடை என்ற பகுதியில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டனி ஜோஸ் என்பவரது தோட்டத்தில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருந்து ஏராளமான கழிவுகள் கொண்டுவந்து கொட்டுவதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் 3 டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட கழிவுகளை, பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி மர்ம நபர்கள் கொட்டி வந்தனர்.
அப்போது, அங்கு சென்ற விவசாயிகள் லாரிகளை சிறைபிடித்து விசாரித்த போது மர்ம நபர்கள் தப்பி ஓடினர். பின்னர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை கைப்பற்றி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த தோட்டத்து உரிமையாளர், ஆண்டனி ஜோசை தேடிவருகின்றனர்.
கேரளாவிலிருந்து அடிக்கடி இது போன்ற கழிவுகளை கொண்டு வந்து விவசாய நிலங்களில் கொட்டி வருவதால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர் எனவும், கேரள எல்லைப் பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடிகளில் முறையான கண்காணிப்பு பணி நடைபெறுவதில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.