கோவை : வாக்குப்பதிவு அன்று கோவை செல்வபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி மையத்தில் நடந்த அதிமுக-திமுக மோதல் விவகாரத்தில் இருதரப்பினரையும் சேர்ந்த 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: வாக்குப்பதிவு அன்று கோவை செல்வபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி மையத்தில் நடந்த அதிமுக-திமுக மோதல் விவகாரத்தில் இருதரப்பினரையும் சேர்ந்த 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை முதல் மாலை வரை இடைவெளி இன்றி நடைபெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தனது ஆதரவாளர்களுடன் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் வாக்குப்பதிவை பார்வையிட வந்தார்.
அப்போது அங்கு இருந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் வேட்பாளரை தாக்க முற்பட்டதால் அங்கு இருதரப்புக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் திமுக வேட்பாளரை காப்பாற்றி திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த மோதல் சம்பவம் குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹலன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை முதல் மாலை வரை இடைவெளி இன்றி நடைபெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தனது ஆதரவாளர்களுடன் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் வாக்குப்பதிவை பார்வையிட வந்தார்.
அப்போது அங்கு இருந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் வேட்பாளரை தாக்க முற்பட்டதால் அங்கு இருதரப்புக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் திமுக வேட்பாளரை காப்பாற்றி திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த மோதல் சம்பவம் குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹலன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.