கோவை: சன் டிவி செய்தியாளர் மோகனை தாக்கிய மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் கண்டம் தெரிவித்துள்ளார்.
கோவை: சன் டிவி செய்தியாளர் மோகனை தாக்கிய மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் கண்டம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வந்தார். அப்போது அங்கே சன் டி வி செய்தியாளர் மோகன் செய்தி சேகரிக்க வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது மோகன் செய்தி சேகரிப்பதை தடுக்கும் வகையில் கமல்ஹாசன் தனது கையில் வைத்திருந்த கைத்தடியால் மோகனின் அலைபேசியை கீழே தட்டிவிட்டு, தாக்க முயன்றுள்ளார்.
நியாயமான முறையில், சுதந்திரமாக, செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர் மோகன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிக்கையாளர்களை அவர்களது கடமையை செய்ய விடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். இந்த தாக்குதலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும்,” என கூறியுள்ளார்.
இது தொடர்பாக நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வந்தார். அப்போது அங்கே சன் டி வி செய்தியாளர் மோகன் செய்தி சேகரிக்க வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது மோகன் செய்தி சேகரிப்பதை தடுக்கும் வகையில் கமல்ஹாசன் தனது கையில் வைத்திருந்த கைத்தடியால் மோகனின் அலைபேசியை கீழே தட்டிவிட்டு, தாக்க முயன்றுள்ளார்.
நியாயமான முறையில், சுதந்திரமாக, செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர் மோகன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிக்கையாளர்களை அவர்களது கடமையை செய்ய விடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். இந்த தாக்குதலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும்,” என கூறியுள்ளார்.