கோவை: தேர்தல் முடிந்த மறுநாளே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் சாதாரண மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
:கோவை: தேர்தல் முடிந்தமறுநாளே தங்கத்தின்விலை கிடுகிடுவென உயர்ந்ததால் சாதாரண மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் உலக அளவில் பிற வணிகங்களில் முதலீடு செய்வது குறைந்தது. எனவே, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கின.அதன் தாக்கம் விலையிலும் எதிரொலிக்க தொடங்கியது.
வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வந்தது. ஒரு சவரன் 43 ஆயிரம் ரூபாய் வரை சென்று வரலாறு படைத்தது. இது மக்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியது.
இச்சூழலில் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 10.75 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதை அடுத்து உடனடியாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் வரை குறைந்து. ஒரு சவரன் 33 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது.பல மாதங்களுக்குப் பிறகு மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை மெல்ல உயர தொடங்கியது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து மறு தினமான இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 620 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று 35 ஆயிரத்து 480 ஆக உள்ளது. இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக கோவை மார்க்கெட்டில் காணப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை(சவரன் ஒன்றுக்கு) விவரம் வருமாறு;
மார்ச் 31: 33 ஆயிரத்து 984 ரூபாய்
ஏப்ரல் 1: 34 ஆயிரத்து 368 ரூபாய்
ஏப்ரல் 2 : 34 ஆயிரத்து 856 ரூபாய்
ஏப்ரல் 3: 34 ஆயிரத்து 864 ரூபாய்
ஏப்ரல் 4 மார்க்கெட் விடுமுறை
ஏப்ரல் 5: 34 ஆயிரத்து 856 ரூபாய்
ஏப்ரல் 6 மார்க்கெட் விடுமுறை
ஏப்ரல் 7 இன்று 35 ஆயிரத்து 480 ரூபாய்
இவ்வாறு கோவையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது.