சென்னை:மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
:சென்னை:மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“சட்டப்பேரவை தேர்தலில் 72 % வாக்குகள் பதிவாகி உள்ளன. கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் போன்ற சூழல் இதற்கு முன்பு இருந்ததில்லை. எனினும் இந்த இக்கட்டான சூழலில் கூட 72 % பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி இருப்பது மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
100% பங்கேற்பே ஜனநாயகம் சென்று சேர வேண்டிய இடம். இனி வரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு ஜனநாயக நம்பிக்கை வாதியாக என் ஆசை.
இந்த தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், சக போட்டியாளர்கள், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம், ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட சகலருக்கும் என மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவு என்பதே இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புது அனுபவம். நிறைய அனுபவங்களை கற்று முன்னநகர்ந்திருக்கின்றோம். மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என்பது அதில் முதன்மையானது.
தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டு கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களை காக்க இன்றுபோல் என்றும் களத்தில் நிற்போம்.”
இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“சட்டப்பேரவை தேர்தலில் 72 % வாக்குகள் பதிவாகி உள்ளன. கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் போன்ற சூழல் இதற்கு முன்பு இருந்ததில்லை. எனினும் இந்த இக்கட்டான சூழலில் கூட 72 % பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி இருப்பது மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
100% பங்கேற்பே ஜனநாயகம் சென்று சேர வேண்டிய இடம். இனி வரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு ஜனநாயக நம்பிக்கை வாதியாக என் ஆசை.
இந்த தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், சக போட்டியாளர்கள், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம், ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட சகலருக்கும் என மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவு என்பதே இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புது அனுபவம். நிறைய அனுபவங்களை கற்று முன்னநகர்ந்திருக்கின்றோம். மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என்பது அதில் முதன்மையானது.
தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டு கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களை காக்க இன்றுபோல் என்றும் களத்தில் நிற்போம்.”
இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.