நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பிங்கர் போஸ்ட் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டன.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பிங்கர் போஸ்ட் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டன.

மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித் தலைவருமான இன்னசென்ட் திவ்யா தலைமையில் பொது பார்வையாளர்கள், வேட்பாளர்கள் அவர்களது முகவர்கள் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக தனித்தனியாக 3 அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர், வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி 102 கேமராக்கள் பொருத்தப்பட்டு 3 ஷிப்டுகளில் சுழற்சி அடிப்படையில் கண்காணிக்கப்படும் என்றார்.

மேலும், மத்திய ரிசர்வ் காவலர்கள் முதல் அடுக்கிலும், உள்ளூர் காவலர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், வாக்காளர்கள் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க தனி கூடாரம் அமைத்து டிவி வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித் தலைவருமான இன்னசென்ட் திவ்யா தலைமையில் பொது பார்வையாளர்கள், வேட்பாளர்கள் அவர்களது முகவர்கள் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக தனித்தனியாக 3 அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர், வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி 102 கேமராக்கள் பொருத்தப்பட்டு 3 ஷிப்டுகளில் சுழற்சி அடிப்படையில் கண்காணிக்கப்படும் என்றார்.
மேலும், மத்திய ரிசர்வ் காவலர்கள் முதல் அடுக்கிலும், உள்ளூர் காவலர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், வாக்காளர்கள் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க தனி கூடாரம் அமைத்து டிவி வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.