தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்: அமைச்சர் வேலுமணி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதி மீறியதாக அமைச்சர் வேலுமணி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதி மீறியதாக அமைச்சர் வேலுமணி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தேர்தல் பிரச்சார முடிவடைந்ததன் பின்னர் கட்சி கூட்டம், பிரச்சாரம் தொடர்பாக எந்த செயல்பாடும் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால் கடந்த 5ம் தேதி திங்களன்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ். பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கூட்டமாகக் கூடி இருந்தனர். கட்சி அலுவலகத்திற்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில், இது தேர்தல் விதிமுறை மீறல் என்று கூறி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அமைச்சர் வேலுமணி செல்வபுரம் பகுதி அதிமுக இளைஞரணி செயலாளர் வீரமணி, செல்வபுரம் பகுதி செயலாளர் விஜயகுமார், 77 -வது வார்டு அதிமுக செயலாளர் காட்டு துறை ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி கூடுதல் கொரோனா தொற்றுநோய் பரவும் வகையில் செயல்படுதல் என இந்திய தண்டனை சட்டப்பிரிவு 269, 143 படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் அரசு பள்ளியில் தன்னுடைய வாக்கு செலுத்துவதற்காகச் சென்றிருந்தார்.

தேர்தல் விதி முறைப்படி 100 மீட்டர் இடைவெளி உட்பட்ட எந்த இடத்திலும் வாகனத்திற்கு அனுமதி இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கும், வயதானவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இப்படி இருக்கும் பட்சத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது வாகனத்தை வாக்குச்சாவடிக்கு அருகிலேயே வந்து நிறுத்தியதும் கட்சிக் கொடியுடன் வந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், பரப்புரை செய்யும் விதமாகவும் இருப்பதாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...