திருப்பூர்: திருமூர்த்தி அணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர்: திருமூர்த்தி அணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணை மற்றும் திருமூர்த்தி மலை சுற்றுலா தலத்துக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கார்த்திக் என்ற கல்லூரி மாணவர் தனது உறவினர்களுடன் திருமலை வந்துள்ளார். அப்போது அணையில் தேங்கியுள்ள நீரில் குளிக்க உள்ளே இறங்கினார்.
கார்த்திக்குக்கு நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது நீரில் மூழ்கினார். அவர் நீரில் மூழ்குவது பார்த்த உடன் வந்த உறவினர் கூச்சலிட்டு உள்ளார்.
இந்த கூச்சலை கேட்டு அங்கிருந்த மலைவாழ் மக்கள் உடனடியாக தண்ணீரில் இறங்கி கார்த்திகை மீட்க முயற்சித்தனர் ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் ரப்பர் படகு மற்றும் டியூப் மூலம் 2 மணி நேர தேடலுக்கு பின்னர் கார்த்திக்கின் உடலை மீட்டனர்.

கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணை மற்றும் திருமூர்த்தி மலை சுற்றுலா தலத்துக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கார்த்திக் என்ற கல்லூரி மாணவர் தனது உறவினர்களுடன் திருமலை வந்துள்ளார். அப்போது அணையில் தேங்கியுள்ள நீரில் குளிக்க உள்ளே இறங்கினார்.
கார்த்திக்குக்கு நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது நீரில் மூழ்கினார். அவர் நீரில் மூழ்குவது பார்த்த உடன் வந்த உறவினர் கூச்சலிட்டு உள்ளார்.
இந்த கூச்சலை கேட்டு அங்கிருந்த மலைவாழ் மக்கள் உடனடியாக தண்ணீரில் இறங்கி கார்த்திகை மீட்க முயற்சித்தனர் ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் ரப்பர் படகு மற்றும் டியூப் மூலம் 2 மணி நேர தேடலுக்கு பின்னர் கார்த்திக்கின் உடலை மீட்டனர்.
கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.