கோவை: மநீம தலைவர் கமல்ஹாசன் தன்னுடன் கைகுலுக்க வில்லை என்பதால் வருத்தம் அடைந்த சுயேட்சை வேட்பாளர் கமல் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.
கோவை: மநீம தலைவர் கமல்ஹாசன் தன்னுடன் கைகுலுக்க வில்லை என்பதால் வருத்தம் அடைந்த சுயேட்சை வேட்பாளர் கமல் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடக் கூடிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடன் போட்டியிடக்கூடிய சக வேட்பாளர் ராகுல் காந்தி என்பவருக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில் அனைவரும் ஒன்றாக கைகோர்ப்போம் என வாழ்த்துக் கூறி இருந்தார்.
அந்தக் கடிதத்தைப் பார்த்து சுயேச்சை வேட்பாளர் ராகுல் காந்தி மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட வந்திருந்தார்.

அப்போது அங்கு இருந்த சுயேட்சை வேட்பாளர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஆனால், அதே நேரத்தில் அவருடன் கைகுலுக்க மறந்து விட்டு சென்று விட்டார். இதனால் மன வருத்தம் அடைந்த ராகுல் காந்தி, கமல் எழுதிய கடிதத்தில் மட்டும் வெற்று வார்த்தைகளால் கை கோர்ப்போம் ஒன்று சேர்வோம் எனக் கூறி இருப்பதாக நினைத்து வருந்தினார்.
நேரில் பார்க்கும்போது மரியாதைக்காக ஒரு கை குலுக்க கூட முடியாமல் புறக்கணித்தது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ள ராகுல் காந்தி, கமல் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை மீண்டும் திருப்பி அனுப்புவதாக கூறி வாழ்த்து கடிதத்தையும் அத்துடன் இணைத்து திருப்பி அனுப்பி உள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடக் கூடிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடன் போட்டியிடக்கூடிய சக வேட்பாளர் ராகுல் காந்தி என்பவருக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில் அனைவரும் ஒன்றாக கைகோர்ப்போம் என வாழ்த்துக் கூறி இருந்தார்.
அந்தக் கடிதத்தைப் பார்த்து சுயேச்சை வேட்பாளர் ராகுல் காந்தி மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட வந்திருந்தார்.
அப்போது அங்கு இருந்த சுயேட்சை வேட்பாளர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஆனால், அதே நேரத்தில் அவருடன் கைகுலுக்க மறந்து விட்டு சென்று விட்டார். இதனால் மன வருத்தம் அடைந்த ராகுல் காந்தி, கமல் எழுதிய கடிதத்தில் மட்டும் வெற்று வார்த்தைகளால் கை கோர்ப்போம் ஒன்று சேர்வோம் எனக் கூறி இருப்பதாக நினைத்து வருந்தினார்.
நேரில் பார்க்கும்போது மரியாதைக்காக ஒரு கை குலுக்க கூட முடியாமல் புறக்கணித்தது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ள ராகுல் காந்தி, கமல் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை மீண்டும் திருப்பி அனுப்புவதாக கூறி வாழ்த்து கடிதத்தையும் அத்துடன் இணைத்து திருப்பி அனுப்பி உள்ளார்.