கோவை: பொள்ளாச்சி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் வரதராஜன் இன்று அவரது சொந்த ஊரான கோட்டாம்பட்டியில் வாக்கு பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் திமுகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெறும். பொள்ளாச்சியில் திமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் வரதராஜன் இன்று அவரது சொந்த ஊரான கோட்டாம்பட்டியில் வாக்கு பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் திமுகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெறும். பொள்ளாச்சியில் திமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.