நீலகிரி: உதகை அருகே உள்ள மலை கிராமங்களில் உள்ள படுகர், கோத்தர் மற்றும் தோடர் இன பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
நீலகிரி: உதகை அருகே உள்ள மலை கிராமங்களில் உள்ள படுகர், கோத்தர் மற்றும் தோடர் இன பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான படுகர், கோத்தர், தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இதில் 80 வயதை கடந்த மூதாட்டிகள் முதற்கொண்டு தள்ளாத வயதினரும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் உள்ள 868 வாக்குச்சாவடிகளில் இன்று காலை முதல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மலை கிராமங்களில் வசித்து வரும் தோட்டத்தொழிலாளர்களும் வாக்களித்துச் செல்கின்றனர்.

குறிப்பாக, உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் வாழ்ந்து வரும் படுகர், கோத்தர் மற்றும் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையான வெள்ளை நிற உடைகளை அணிந்த படி வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.
நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான படுகர், கோத்தர், தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதில் 80 வயதை கடந்த மூதாட்டிகள் முதற்கொண்டு தள்ளாத வயதினரும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் உள்ள 868 வாக்குச்சாவடிகளில் இன்று காலை முதல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மலை கிராமங்களில் வசித்து வரும் தோட்டத்தொழிலாளர்களும் வாக்களித்துச் செல்கின்றனர்.
குறிப்பாக, உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் வாழ்ந்து வரும் படுகர், கோத்தர் மற்றும் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையான வெள்ளை நிற உடைகளை அணிந்த படி வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.