கோவை: தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். பத்து தொகுதிகளிலும் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை: தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். பத்து தொகுதிகளிலும் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, காலை 7 மணிக்கு கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி, காலை 1மணி நேர நிலவரப்படி கோவை மாவட்டத்தில் 39.56 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
இதில் மேட்டுப்பாளையத்தில் 33.88, சூலூரில் 42.76, கவுண்டம்பாளையத்தில் 36.89, கோவை வடக்கு 35.16, தொண்டாமுத்தூர் 43.12, கோவை தெற்கு 36.80, சிங்காநல்லூர் 40.75, கிணத்துக்கடவில் 43.54. பொள்ளாச்ச்சி 47.03, வால்பாறையில் 37.44 என மொத்தம் சராசரியாக 39.56சதவீதம் பதிவாகியுள்ளது.