ஆர்.கே நகர் போல பாஜக சார்பில் டோக்கன் விநியோகம் - கையும் களவுமாக பறிமுதல் செய்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சாலை மறியல்!

கோவை: கோவை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


கோவை: கோவை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே வேட்பாளர்கள் குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் பணம் கொடுப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில், கோவை சலிவன் வீதி பகுதியில் வாக்கு செலுத்த வந்த வாக்காளர் கையில் டோக்கன்களை பாஜகவினர் வழங்கிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் அவர்களை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து டோக்கனை பறிமுதல் செய்தனர். அந்த டோக்கன் வாக்கு செலுத்தி முடிந்தபின்பு பணம் பெற்றுக் கொள்வதற்காக என்பது குறிப்பிடத்தக்கது.



தொடர்ந்து புகார் செய்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் தேர்தல் அதிகாரிகளை கண்டித்து கோவை தெற்கு தொகுதி திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டார்.



அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் இணைந்து கொண்டார். ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் வாக்கு பதிவு செய்யக்கூடிய சலிவன் வீதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...