கோவையில் பூத் சிலிப் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வாக்காளர்கள் கடும் அவதி!

கோவை: கோவை மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வாக்காளர்கள் கடும் அவதியடைந்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வாக்காளர்கள் கடும் அவதியடைந்தனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். பத்து தொகுதிகளிலும் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வாக்காளர்களுக்கு எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்கிற பூத் சிலிப் விநியோகம் கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சரிவர வழங்கப்படவில்லை. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பூத் சிலிப் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், மாவட்டத்தில் பல இடங்களில் பூத் சிலிப்கள் தேர்தல் நாள் வரையிலும் கூட வழங்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையத்தால் இணையத்தில் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு அதை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பூத் சிலிப் பெற்றுக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வாக்காளர்கள் அதிகளவில்வாக்குச்சாவடிகளில் குவிந்து வருவதால், பூத் சிலிப் வழங்க தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாக்காளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும், வாக்களிக்க வருவோருக்கு வாக்குச்சாவடிகளில் கொரோனா பரவாமல் தடுக்க வாக்காளர்களுக்கு கிருமிநாசினி மற்றும் கையுறை வழங்கப்பட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...