கோவை: திமுக பிரமுகர் கணபதி ராஜ்குமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை: திமுக பிரமுகர் கணபதி ராஜ்குமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரி துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அதிமுக முன்னாள் மேயரும் தற்போதைய திமுக பிரமுகருமான கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சற்று நேரத்திற்கு முன்பு கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள கணபதி ராஜ்குமார் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கணபதி ராஜ்குமார் வீட்டில் திமுக சார்பில் பணம் பதுக்கி வைத்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தொலைபேசி மூலம் தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரி துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அதிமுக முன்னாள் மேயரும் தற்போதைய திமுக பிரமுகருமான கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சற்று நேரத்திற்கு முன்பு கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள கணபதி ராஜ்குமார் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கணபதி ராஜ்குமார் வீட்டில் திமுக சார்பில் பணம் பதுக்கி வைத்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தொலைபேசி மூலம் தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.