கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.55.47 கோடி பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.55.47 கோடி பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை பெற கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் விதிமுறை மீறல் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் விநியோகித்தல் உட்பட பல புகார்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வந்தன.
இந்த புகார்கள் தேர்தல் பறக்கும் படையினரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நேற்று வரை 288 புகார்கள் பெறப்பட்டு 139 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 146 புகார்கள் நிராகரிக்கப்பட்டு 3 புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல சி- விஜில் மொபைல் செயலி மூலம் 732 புகார்கள் வந்தன. அதில் 542 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 155 புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 5 புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களுக்களின் சோதனையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 9 லட்சத்து 27 ஆயிரத்து 220 ரொக்கப் பணமும், 2 லட்சத்து 83 ஆயிரத்து 676 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் இதுவரை 6 கோடியே 83 லட்சத்து 77 ஆயிரத்து 318 ரூபாய் ரொக்கப் பணமும், 70 லட்சத்து 14 ஆயிரத்து 282 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும், 47 கோடியே 91 லட்சத்து 58 ஆயிரத்து 707 ரூபாய் மதிப்பிலான இதர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணம் மற்றும் இதர பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் சமர்பித்தவர்களுக்கு பணமும், பொருட்களும் திருப்பி அளிக்கப் பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை பெற கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் விதிமுறை மீறல் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் விநியோகித்தல் உட்பட பல புகார்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வந்தன.
இந்த புகார்கள் தேர்தல் பறக்கும் படையினரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நேற்று வரை 288 புகார்கள் பெறப்பட்டு 139 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 146 புகார்கள் நிராகரிக்கப்பட்டு 3 புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல சி- விஜில் மொபைல் செயலி மூலம் 732 புகார்கள் வந்தன. அதில் 542 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 155 புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 5 புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களுக்களின் சோதனையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 9 லட்சத்து 27 ஆயிரத்து 220 ரொக்கப் பணமும், 2 லட்சத்து 83 ஆயிரத்து 676 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் இதுவரை 6 கோடியே 83 லட்சத்து 77 ஆயிரத்து 318 ரூபாய் ரொக்கப் பணமும், 70 லட்சத்து 14 ஆயிரத்து 282 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும், 47 கோடியே 91 லட்சத்து 58 ஆயிரத்து 707 ரூபாய் மதிப்பிலான இதர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணம் மற்றும் இதர பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் சமர்பித்தவர்களுக்கு பணமும், பொருட்களும் திருப்பி அளிக்கப் பட்டுள்ளன.