கோவை: மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக கோவை மாவட்டம் முழுவதும் 4427 வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக கோவை மாவட்டம் முழுவதும் 4427 வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி கோவை 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்முறை கொரோனா வைரஸ் தொற்றினை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் 1050 க்கு அதிகமான வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதலாக துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
10 தொகுதிகளிலும் வாக்காளர்கள் எவ்வித சிரமமின்றி வந்து வாக்களிக்கும் விதமாக வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கோடை காலம் என்பதால் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஒய்வெடுக்கும் வகையில் தற்காலிக நிழற்குடை அல்லது சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிமையாக வாக்குப்பதிவில் பங்கேற்கும் விதமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் மூலமாக சக்கர நாற்காலிகளும் அனுப்பப்பட்டுள்ளன.