வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் விடுமுறை வேண்டும் - தேர்தல் பணியாளர்கள் கோரிக்கை!

கோவை: சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் அடுத்தநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் அடுத்தநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்து இயந்திரங்களை ஒப்படைத்த பிறகே, அலுவலர்கள் வீடு திரும்ப முடியும். முன்பு, பள்ளி கோடை விடுமுறை அல்லது வார இறுதியில், பெரும்பாலும் தேர்தல் நடத்தியதால், அடுத்தநாள் ஓய்வு எடுத்த பிறகு, அலுவலர்கள் பணிக்கு திரும்புவர்.

இந்நிலையில், தற்போது பணிநாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஓட்டுப் பதிவு நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்தநாள் விடுப்பு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் கூறுகையில், 'தேர்தலுக்கு அடுத்தநாள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என அதிகாரிகள் வாய்வழியாக தான் தெரிவிக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், ஆசிரியர்கள் மத்தியில், பணிக்கு திரும்ப வேண்டுமா என்ற குழப்பம் உள்ளது. கிட்டத்தட்ட, 12 மணி நேர தேர்தல் பணிக்கு பிறகு, ஓய்வு தேவைப்படுவதால், வரும் 7ம் தேதி, விடுமுறை அறிவிக்க வேண்டும்,' என்றார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...