திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி(தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம்(தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள் 11,66,417, பெண் வாக்காளர்கள் 11,93,104 மற்றும் மூன்றாம் பாலினம் 283 என மொத்தம் 23,59,804 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி(தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம்(தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள் 11,66,417, பெண் வாக்காளர்கள் 11,93,104 மற்றும் மூன்றாம் பாலினம் 283 என மொத்தம் 23,59,804 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,343 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாவட்டத்தில் தாராபுரம் தொகுதியில் 14 பேர், காங்கயத்தில் 26 பேர், அவிநாசி தொகுதியில் 12 பேர், திருப்பூர் வடக்கு தொகுதியில் 15 பேர், திருப்பூர் தெற்கில் 20 பேர், பல்லடத்தில் 20 பேர், உடுமலை தொகுதியில் 15, மடத்துக்குளம் தொகுதியில் 15 என மாவட்டம் முழுவதும், 8 சட்டப்பேரவைத் தொகுதியில் 137 பேர் களத்தில் உள்ளனர்.
திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் காங்கயம் ஆகிய மூன்று தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைந்தபட்சம் 15 வேட்பாளர்களுக்கான சின்னங்களும், ஒரு நோட்டாவுக்கான சின்னமும் இடம்பெறும். திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் காங்கயம் தொகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இடம்பெறுவதால், மேற்கண்ட தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் 124 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில், பணிபுரிய உள்ள 168 நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டத்தில் அதிகபட்சமாக உடுமலை தொகுதியில் 22 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 124 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 168 நுண் பார்வையாளர்கள்(மைக்ரோ அப்சர்வர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் 16,044 பேர் தபால் வாக்குகளை பெற்றிருந்தனர். மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் 3,871 வாக்காளர்கள் கோரியிருந்தனர். மாவட்டம் முழுவதும் 1500 போலீஸார் மற்றும் மாநகரில் சுமார் 800 போலீஸார் இவர்களுடன் துணை ராணுவப்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மாவட்டம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் தவிர தேர்தல் பணியில் 17,500 ஊழியர்கள், அலுவலர்கள் என மாவட்டம் முழுவதும் பணி செய்ய உள்ளனர்.
இதனிடையே, மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் 297 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,343 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாவட்டத்தில் தாராபுரம் தொகுதியில் 14 பேர், காங்கயத்தில் 26 பேர், அவிநாசி தொகுதியில் 12 பேர், திருப்பூர் வடக்கு தொகுதியில் 15 பேர், திருப்பூர் தெற்கில் 20 பேர், பல்லடத்தில் 20 பேர், உடுமலை தொகுதியில் 15, மடத்துக்குளம் தொகுதியில் 15 என மாவட்டம் முழுவதும், 8 சட்டப்பேரவைத் தொகுதியில் 137 பேர் களத்தில் உள்ளனர்.
திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் காங்கயம் ஆகிய மூன்று தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைந்தபட்சம் 15 வேட்பாளர்களுக்கான சின்னங்களும், ஒரு நோட்டாவுக்கான சின்னமும் இடம்பெறும். திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் காங்கயம் தொகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இடம்பெறுவதால், மேற்கண்ட தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் 124 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில், பணிபுரிய உள்ள 168 நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டத்தில் அதிகபட்சமாக உடுமலை தொகுதியில் 22 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 124 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 168 நுண் பார்வையாளர்கள்(மைக்ரோ அப்சர்வர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் 16,044 பேர் தபால் வாக்குகளை பெற்றிருந்தனர். மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் 3,871 வாக்காளர்கள் கோரியிருந்தனர். மாவட்டம் முழுவதும் 1500 போலீஸார் மற்றும் மாநகரில் சுமார் 800 போலீஸார் இவர்களுடன் துணை ராணுவப்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மாவட்டம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் தவிர தேர்தல் பணியில் 17,500 ஊழியர்கள், அலுவலர்கள் என மாவட்டம் முழுவதும் பணி செய்ய உள்ளனர்.
இதனிடையே, மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் 297 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.