கோவை: கோவை கரும்புகடை பகுதியில் பிரச்சாரத்தின் போது அமைச்சர் வேலுமணி குறித்து கோஷம் எழுப்பியதால், திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
: கோவை: கோவை கரும்புகடை பகுதியில் பிரச்சாரத்தின் போது அமைச்சர் வேலுமணி குறித்து கோஷம் எழுப்பியதால், திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதில் 12 பேர் காயமடைந்ததாக, அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர், என்று கூறப்படுகிறது.
இன்று மாலை, கரும்புகடை பகுதியில் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பார்த்து, டவுன் டவுன் (down, down) வேலுமணி என அமைச்சருக்கு எதிராக திமுகவினர் முழக்கம் எழுப்பியதாதாக கூறப்படுகிறது.. இதனால், திமுக மற்றும் அதிமுக என இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அவர்களை சமாதானபடுத்த காவல்துறை முயற்சி மேற்கொண்டனர். இருந்தபோதும், தொடர்ந்து, தள்ளு முள்ளு காரணமாக இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, காயம் அடைந்தவர்களை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், சண்முகசுந்தரம் எம்பி, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோர் சென்று ஆறுதல் கூறினர்.

இதனையடுத்து, அரசு மருத்துவமனையிலும் இரு திருப்பு சேர்ந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கும் பரபரப்பு நிலவியது.
இதில் 12 பேர் காயமடைந்ததாக, அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர், என்று கூறப்படுகிறது.
இன்று மாலை, கரும்புகடை பகுதியில் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பார்த்து, டவுன் டவுன் (down, down) வேலுமணி என அமைச்சருக்கு எதிராக திமுகவினர் முழக்கம் எழுப்பியதாதாக கூறப்படுகிறது.. இதனால், திமுக மற்றும் அதிமுக என இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அவர்களை சமாதானபடுத்த காவல்துறை முயற்சி மேற்கொண்டனர். இருந்தபோதும், தொடர்ந்து, தள்ளு முள்ளு காரணமாக இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, காயம் அடைந்தவர்களை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், சண்முகசுந்தரம் எம்பி, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோர் சென்று ஆறுதல் கூறினர்.
இதனையடுத்து, அரசு மருத்துவமனையிலும் இரு திருப்பு சேர்ந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கும் பரபரப்பு நிலவியது.