கோவை; சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் இறுதிகட்டப் பரப்புரையை நிறைவு செய்தனர்.
:கோவை; சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் இறுதிகட்டப் பரப்புரையை நிறைவு செய்தனர்.
தேர்தல் பரப்புரைக்கு கடைசி நாளான இன்று சிங்காநல்லூர் தொகுதியில் அனைத்து அரசியல் கட்சிகளும் காலை முதலே மிகுந்த விறுவிறுப்புடன் பரப்புரையில் ஈடுபட்டனர்.
மாலை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தனித்தனி இடங்களில் சரியாக 7 மணிக்கு நிறைவுறும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தினர்.
தேர்தல் ஆணையம் விதித்த கெடுவுக்குள் பரப்புரைகள் நிறைவு அடைந்தன. அதிமுக வேட்பாளர் கே. ஆர். ஜெயராம் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் அருகே இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார்.
திமுக வேட்பாளர் கார்த்திக் மசக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பரப்புரையை நிறைவு செய்தார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் நஞ்சுண்டாபுரம் பகுதியிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நர்மதா சிங்காநல்லூர் பகுதியிலும் சுயேச்சை வேட்பாளர் கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிராஜ், ஜீ.வி ரெசிடென்சி தன விநாயகர் கோயில் அருகிலும் பரப்புரைகளை நிறைவு செய்தனர்.
இறுதி நாள் என்பதால் சிங்காநல்லூர் தொகுதி முழுவதும் காலை முதல் மாலை வரை இடைவெளி இல்லாமல் பரப்புரை நடைபெற்றது. தொகுதி முழுவதும் மேளதாளம் முழங்க வாகனங்களில் ஒலிபெருக்கி ஒலி எழுப்ப, கலைஞர்கள் நடனமாட ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பரப்புரை நிறைவு பெற்றது.
