சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேட்பாளர் ஜெயராம் நம்பிக்கை!

கோவை; அதிமுகவுக்கு சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேட்பாளர் ஜெயராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


:கோவை; அதிமுவுக்கு சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேட்பாளர் ஜெயராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் செய்ய கடைசி நாளான இன்று கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. ஆர். ஜெயராம் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் அருகே இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.

'SimpliCity' நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

“சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. நான் பரப்புரை மேற்கொண்ட இடங்களில் எல்லாம் இதை நேரடியாக காண முடிந்தது. இந்த சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற கார்த்திக் கடந்த 5 ஆண்டுகளாக தொகுதியில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

நான் வாக்கு கேட்டு சென்ற இடமெல்லாம் மக்கள் திமுக குறித்த புகார்களை முன்வைத்தனர். அதிமுக பெண்களை மதிக்கும் கட்சி. தாய்மையைப் போற்றும் கட்சி. பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளோம்.

எனவே சிங்காநல்லூர் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. வெற்றி பெற்று பதவியேற்றவுடன் முதல் 30 நாட்களுக்குள், நான் எனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல ஏழு இடங்களில் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கப்படும்.

நடமாடும் குறைதீர்ப்பு மையங்களும் செயல்படுத்தப்பட்டு மக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகம் இருந்த காலத்தில் 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட பல்வேறு உதவி பொருட்களை சிங்காநல்லூர் மக்களுக்கு நேரடியாக வழங்கினேன். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நான் செய்த உதவிக்கு நிச்சயம் மக்கள் மதிப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.”இவ்வாறு கே.ஆர்.ஜெயராம் கூறினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...