கோவை: கோவை வடக்கு தொகுதியில் ஒரே இடத்தில் அதிமுக-திமுகவினர் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டதால் மோதல் ஏற்படும் சூழலால் பதற்றம் ஏற்பட்டது.
கோவை: கோவை வடக்கு தொகுதியில் ஒரே இடத்தில் அதிமுக-திமுகவினர் இறுதி கட்டப்பரப்புரை மேற்கொண்டதால் மோதல் ஏற்படும் சூழலால் பதற்றம் ஏற்பட்டது.
சட்டமன்றப் பொதுத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 7 மணியுடன் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் பரப்புரையை முடித்துக் கொண்டனர்.
கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் மாலை 6 மணி முதல் ஆறு முப்பது மணி வரை திமுக வேட்பாளர் சண்முகசுந்தரமும் ஆறு முப்பது மணி முதல் 7 மணி வரை அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனும் பரப்புரை மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதிமுகவினர் அந்த பகுதியில் வந்து தங்களது பரப்புரை வாகனத்தை நிறுத்தியதுடன் தங்களது கட்சி தொண்டர்களையும் திரட்டியிருந்தனர்.
இந்த நிலையில் சுமார் ஆறு மணி 20 நிமிடம் அளவில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் தனது ஆதரவாளர்களுடன் அந்த பகுதியில் இறுதிகட்டப் பரப்புரையில் ஈடுபடுவதற்காக வந்தார்.

அப்போது அதிமுக வினர் திமுகவினரை பார்த்து கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதேபோல் பதிலுக்கு திமுகவினரும் கோஷம் எழுப்பியதால் இரு தரப்பினரிடையே மோதல் எழும் சூழல் உருவானது.

அங்கிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேசி சமாதானம் செய்தனர். பின்னர் ஒரே இடத்தில் இரண்டு வேட்பாளர்களும் நின்று கொண்டு தங்கள் ஆதரவாளர்களுடன் மாறி மாறி கோஷங்களை எழுப்பியும் மேளதாளம் முழங்கவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் "அதிமுகவினரின் அராஜக போக்கிற்கு காலம் பதில் சொல்லும். அனைவரும் எந்த பிரச்சினையிலும் ஈடுபடாமல் கலைந்து செல்ல வேண்டும்" என தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதேவேளையில் பிரச்சாரத்திற்கான நேரம் முடிவடைந்ததால் அதிமுகவினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இரு கட்சியினரும் அதிக அளவில் திரண்டிருந்ததால் அந்தப் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
சட்டமன்றப் பொதுத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 7 மணியுடன் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் பரப்புரையை முடித்துக் கொண்டனர்.
கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் மாலை 6 மணி முதல் ஆறு முப்பது மணி வரை திமுக வேட்பாளர் சண்முகசுந்தரமும் ஆறு முப்பது மணி முதல் 7 மணி வரை அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனும் பரப்புரை மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதிமுகவினர் அந்த பகுதியில் வந்து தங்களது பரப்புரை வாகனத்தை நிறுத்தியதுடன் தங்களது கட்சி தொண்டர்களையும் திரட்டியிருந்தனர்.
இந்த நிலையில் சுமார் ஆறு மணி 20 நிமிடம் அளவில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் தனது ஆதரவாளர்களுடன் அந்த பகுதியில் இறுதிகட்டப் பரப்புரையில் ஈடுபடுவதற்காக வந்தார்.
அப்போது அதிமுக வினர் திமுகவினரை பார்த்து கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதேபோல் பதிலுக்கு திமுகவினரும் கோஷம் எழுப்பியதால் இரு தரப்பினரிடையே மோதல் எழும் சூழல் உருவானது.
அங்கிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேசி சமாதானம் செய்தனர். பின்னர் ஒரே இடத்தில் இரண்டு வேட்பாளர்களும் நின்று கொண்டு தங்கள் ஆதரவாளர்களுடன் மாறி மாறி கோஷங்களை எழுப்பியும் மேளதாளம் முழங்கவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் "அதிமுகவினரின் அராஜக போக்கிற்கு காலம் பதில் சொல்லும். அனைவரும் எந்த பிரச்சினையிலும் ஈடுபடாமல் கலைந்து செல்ல வேண்டும்" என தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதேவேளையில் பிரச்சாரத்திற்கான நேரம் முடிவடைந்ததால் அதிமுகவினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இரு கட்சியினரும் அதிக அளவில் திரண்டிருந்ததால் அந்தப் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.