கோவை; கோவை தெற்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார்.
கோவை; கோவை தெற்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார்.
கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது இறுதி கட்ட அனல் பறக்கும் பரப்புரையை சிவானந்தா காலனியில் இன்று தொடங்கினார்.

இந்த இறுதி கட்ட பரப்புரையில் காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் மாவட்ட பகுதி, இடைக்குழு தலைவர்கள் பங்கேற்றனர்.

பரப்புரையில் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், “நான் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டேன். திமுக தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெறும் என்பதை அறிந்து கொண்டேன். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது நூறு சதவீதம் உறுதியானதாகும். கோவை தெற்கு தொகுதியில் மயூரா ஜெயக்குமார் வெற்றி பெறுவார்” என்று உறுதி தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது இறுதி கட்ட அனல் பறக்கும் பரப்புரையை சிவானந்தா காலனியில் இன்று தொடங்கினார்.
இந்த இறுதி கட்ட பரப்புரையில் காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் மாவட்ட பகுதி, இடைக்குழு தலைவர்கள் பங்கேற்றனர்.
பரப்புரையில் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், “நான் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டேன். திமுக தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெறும் என்பதை அறிந்து கொண்டேன். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது நூறு சதவீதம் உறுதியானதாகும். கோவை தெற்கு தொகுதியில் மயூரா ஜெயக்குமார் வெற்றி பெறுவார்” என்று உறுதி தெரிவித்தார்.