பொள்ளாச்சி ஜெயராமனை அவதூறாக பேசியதாக திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வழக்கு!

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட போது பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி தயாநிதி மாறன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


பொள்ளாச்சி: கிணத்துக்கடவு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட போது பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி தயாநிதி மாறன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கடந்த மார்ச் 29ம் தேதி மாலை திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான தயாநிதி மாறன் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பதாகவும், அதேபோல் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தயாநிதி மாறன் பேசியதாக கூறப்படுகிறது

இந்நிலையில் இது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்திருந்த புகாரில், பரப்புரையின் போது திமுக எம்பி தயாநிதி மாறன், பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டில் என் மகன் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பேசியது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் பாலியல் குற்றச்சாட்டில் என் மகனை உட்படுத்தி பேசிய தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி தனி நபரை களங்கப்படுத்தும் வகையில் பேசியதாக இரண்டு பிரிவுகளில் தயாநிதி மாறன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...