கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் - கோவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு!

கோவை: கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் என கோவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



கோவை: கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் என கோவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கோவை என்றும் காணாத வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார். கோவையில் புதிய சாலைகளை அமைத்துள்ளதோடு, முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட்டு உள்ளது எனவும், இதன் மூலம் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், 6 புதிய அரசு கல்லூரிகள் அமைத்துள்ளோம் எனவும், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்த அவர், கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது எனவும், 2011 க்கு பிறகு கோவையில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை என்று தெரிவித்தார்.

அதேபோல, பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது எனவும் கூறிய அவர், வாக்களித்த மக்களுக்கு நன்றி உணர்வுடனும், மனசாட்சி உடனும் பணியாற்றி உள்ளோம் எனத் தெரிவித்தார்.

மேலும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் என்றவர், எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்பதே கள நிலவரம் எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக முக்கிய நிர்வாகிகளிடம் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும், திமுகவினர் கள்ள ஒட்டு போடவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டிய அவர், அதிமுக அப்படி இல்லை என்று தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...