கோவை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட கல்லாபுரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.
கோவை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட கல்லாபுரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கல்லாபுரம், கிணத்துக்கடவு நகரம்,நாச்சிபாளையம் ஆகிய பகுதியில் குறிச்சி பிரபாகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பேசியதாவது:-
கிணத்துக்கடவு மேற்குப் பகுதியில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. கடந்த ஐந்து வருடமாக எம்எல்ஏவாக இருந்த எட்டிமடை சண்முகம் அத்தியாவசிய பிரச்சினையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள் செய்து தரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அதேபோல, அமைச்சராக உள்ள எஸ்.பி.வேலுமணி மக்களைப் பற்றி கவலைப்படாமல் கொள்ளையடிப்பதிலும், கமிஷன் பெறுவதிலும் குறிக்கோளாக இருந்தார் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள்படி 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெறும் என சொல்லி இருப்பதாக கூறினார்.
அதன்படி திமுக ஆட்சி அமைந்தவுடன் கிணத்துக்கடவு மேற்குப் பகுதி ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து பேசினார்.

மேலும், மக்களைப் பற்றி துளியும் கூட கவலைப்படாமல் இருந்த அதிமுக ஆட்சியை மக்களாகிய நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் வாக்காளர்களிடம் பேசினார்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கல்லாபுரம், கிணத்துக்கடவு நகரம்,நாச்சிபாளையம் ஆகிய பகுதியில் குறிச்சி பிரபாகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பேசியதாவது:-
கிணத்துக்கடவு மேற்குப் பகுதியில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. கடந்த ஐந்து வருடமாக எம்எல்ஏவாக இருந்த எட்டிமடை சண்முகம் அத்தியாவசிய பிரச்சினையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள் செய்து தரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அதேபோல, அமைச்சராக உள்ள எஸ்.பி.வேலுமணி மக்களைப் பற்றி கவலைப்படாமல் கொள்ளையடிப்பதிலும், கமிஷன் பெறுவதிலும் குறிக்கோளாக இருந்தார் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள்படி 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெறும் என சொல்லி இருப்பதாக கூறினார்.
அதன்படி திமுக ஆட்சி அமைந்தவுடன் கிணத்துக்கடவு மேற்குப் பகுதி ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து பேசினார்.
மேலும், மக்களைப் பற்றி துளியும் கூட கவலைப்படாமல் இருந்த அதிமுக ஆட்சியை மக்களாகிய நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் வாக்காளர்களிடம் பேசினார்.