கோவை; மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவர் மீது ஏறி ஓட்டுநர் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கோவை; மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவர் மீது ஏறி ஓட்டுநர் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கோவை காரணம் பேட்டையைச் சேர்ந்த குருசாமி (48) பால் லாரி ஓட்டுநராக பணிபுரிகிறார். இன்று காலை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனது நிறுவனத்திற்கு லாரியை எடுத்துச் சென்றார். திடீரென அவர் அதே பகுதியில் உள்ள 150 அடி உயர செல்போன் டவரில் ஏறினார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பீளமேடு தீயணைப்பு துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் குருசாமியை டவரில் இருந்து இறங்க கூறினர். ஆனால் அவர் இறங்க மறுத்தார். தீயணைப்பு வீரர்கள் டவர் மீது ஏறி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் வரை அடம்பிடித்த குருசாமி, தன்னை பிரிந்து வாழும் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை மனைவியுடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து செல்போன் டவரில் இருந்து அவர் கீழே இறங்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.
கோவை காரணம் பேட்டையைச் சேர்ந்த குருசாமி (48) பால் லாரி ஓட்டுநராக பணிபுரிகிறார். இன்று காலை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனது நிறுவனத்திற்கு லாரியை எடுத்துச் சென்றார். திடீரென அவர் அதே பகுதியில் உள்ள 150 அடி உயர செல்போன் டவரில் ஏறினார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பீளமேடு தீயணைப்பு துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் குருசாமியை டவரில் இருந்து இறங்க கூறினர். ஆனால் அவர் இறங்க மறுத்தார். தீயணைப்பு வீரர்கள் டவர் மீது ஏறி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் வரை அடம்பிடித்த குருசாமி, தன்னை பிரிந்து வாழும் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை மனைவியுடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து செல்போன் டவரில் இருந்து அவர் கீழே இறங்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.