வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக 4 அதிமுகவினர் கைது!

நீலகிரி; கோத்தகிரியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக 4 அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நீலகிரி; கோத்தகிரியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக 4 அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைகிறது. வேட்பாளர்கள் கடைசி கட்ட தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் கடைசி நிமிடத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்று விடும் முனைப்பில் உள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பறக்கும் படையினர் கண்காணிப்பின்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடை வீதியில் பணம் பட்டுவாடாவில் ஈடுபட்ட 4 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் அதிமுகவினர் என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ. 59,500 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக பி.சுப்ரமணி, எம்.சுப்பிரமணி, சிவராஜ் முருகன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். பின்னர் 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...