கோவையில் கூடுதல் எஸ்.பி, திடீர் மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு!

கோவை: கோவை மாவட்ட கூடுதல் எஸ்.பி. அனிதா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.


கோவை: கோவை மாவட்ட கூடுதல் எஸ்.பி. அனிதா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தேர்தலில் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக பல்வேறு போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது திமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாமணி, காவல் ஆணையர் சுமித் சரண், ஐ.ஜி தினகரன், எஸ்.பி அருளரசு, ஆகியோரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக பணிபுரிந்து சமீபத்தில் போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக நியமிக்கப்பட்ட அனிதாவை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அனிதா காத்திருப்போர் பட்டியல் வைக்கப்பட்டார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...