சட்டமன்ற தேர்தல்: அதிமுகவிற்கு தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு!

கோவை: சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பு அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.



கோவை: சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பு அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.



தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோவையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, அவர்கள் தெரிவித்ததாவது:

கடந்த 40 ஆண்டு காலமாக எங்களின் கோரிக்கையான ஈழுவா திய்யா சமூக மக்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில் இதில் கூட்டமைப்பு சார்பாக ஆதரிக்கிறோம்.

இதை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.



இதனைத் தொடர்ந்து, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் எங்கும் உள்ள எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும், உங்கள் சமுதாய மக்களின் வாழ்வாதாரம் இளைய தலைமுறையினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அதிமுக கூட்டணியை ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...