கோவை; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு 2 கி.மீ தூரத்தில் வீடு கட்டித்தரப்படும் என கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் வாக்குறுதி அளித்துள்ளார்.
கோவை; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு 2 கி.மீ தூரத்தில் வீடு கட்டித்தரப்படும் என கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் வாக்குறுதி அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கோவை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் பூசாரிபாளையம் முத்தண்ணன் குளம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் மக்களிடம் கூறியதாவது;
“ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் முத்தண்ணன் குளம் பகுதியில் இரண்டு தலைமுறைகளாக வசித்து வந்த மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களது வேலை வாய்ப்பு குழந்தைகள் கல்வி என்ன வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது.
அப்புறப்படுத்தாமல் அருகிலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும் என அவர்கள் போராடினர். அவர்களுடன் இணைந்து நானும் போராடினேன். தற்காலிகமாக காலி செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களின் கோரிக்கையை ஏற்று 2 கிலோமீட்டர் தொலைவில் வீடு கட்டிக் கொடுக்கப்படும்.” இவ்வாறு வ.ம.சண்முகசுந்தரம் வாக்குறுதி அளித்தார். பரப்புரையின்போது பொறுப்புக் குழு உறுப்பினர்கள் குப்புசாமி துரைசாமி கருணாநிதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.