கோவை: பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதையில்லை வானதி சீனிவாசன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை: பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதையில்லை வானதி சீனிவாசன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் தேர்தல் பணிமனையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

“உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரைக்காக கோவை வந்திருந்தபோது நடந்த சில சம்பவங்களில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போல தவறாக சித்தரித்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம்.
காவல்துறை பாதுகாப்பு குறைவாக இருந்த இடத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட சலசலப்பு குறித்து தீர விசாரிக்க வேண்டும். பா.ஜ.க அனைவருக்குமான கட்சியாக செயல்படுகிறது. எந்த மத உணர்வுக்கும் பாஜக எதிரானதல்ல. சிலர் பாஜக மீது பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடி மற்றும் டீசர்ட்டுகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவதாக தகவல் வந்துள்ளது. வாக்கு வங்கிக்காக மக்களிடையே பிரிவை உண்டாக்கும் சக்திகளை மக்கள் ஒதுக்க வேண்டும். கல்வீச்சு சம்பவம் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும்.
மறைந்த பாஜக தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது அவரது அரசியல் அறியாமையை காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் குறித்து பேச எந்த அருகதையும் கிடையாது. வாக்கு வங்கிக்காக பிரிவினையை தூண்டும் அரசியலை செய்வது திமுக தான்.” இவ்வாறு வானதி சீனிவாசன் பேட்டியளித்தார்.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் தேர்தல் பணிமனையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரைக்காக கோவை வந்திருந்தபோது நடந்த சில சம்பவங்களில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போல தவறாக சித்தரித்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம்.
காவல்துறை பாதுகாப்பு குறைவாக இருந்த இடத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட சலசலப்பு குறித்து தீர விசாரிக்க வேண்டும். பா.ஜ.க அனைவருக்குமான கட்சியாக செயல்படுகிறது. எந்த மத உணர்வுக்கும் பாஜக எதிரானதல்ல. சிலர் பாஜக மீது பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடி மற்றும் டீசர்ட்டுகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவதாக தகவல் வந்துள்ளது. வாக்கு வங்கிக்காக மக்களிடையே பிரிவை உண்டாக்கும் சக்திகளை மக்கள் ஒதுக்க வேண்டும். கல்வீச்சு சம்பவம் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும்.
மறைந்த பாஜக தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது அவரது அரசியல் அறியாமையை காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் குறித்து பேச எந்த அருகதையும் கிடையாது. வாக்கு வங்கிக்காக பிரிவினையை தூண்டும் அரசியலை செய்வது திமுக தான்.” இவ்வாறு வானதி சீனிவாசன் பேட்டியளித்தார்.