கோவை: கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கமல்ஹாசன், இன்று அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கல்லுக்குழி பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
கோவை: கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கமல்ஹாசன், இன்று அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கல்லுக்குழி பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

சமீபத்தில் கமல்ஹாசனின் காலில் அறுவை சிகிச்சை செய்யப்படாததால், தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், கால் வலி குறைய வாக்கிங் ஸ்டிக் ஐ பிடித்தபடி அவர் கல்லுக்குழி பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது, அங்கிருந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று, அவர் கால் வலி மற்றும் உடல் நிலை குறித்தும் விசாரித்தனர்.
தொழில் நகரமான கோவையில் வளர்ச்சியடைந்த பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு அருகே தான் வார்டு 71- ல் கல்லுக்குழி என்ற பகுதியும் உள்ளது. கழிப்பிட வசதி, கூட இல்லாமல் வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு பொதுக்கழிப்பிட வசதி கூட கிடையாது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், ஆஸ்பட்டால், தகரங்கள் கொண்ட கூரைகளுக்கு கீழ் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
நகரத்தில் உள்ள குப்பைகளை இப்பகுதியில் கொட்டுவது, சுகாதரமான குடிநீர் வசதி இல்லாதது, போன்ற பல பிரச்சனைகளுடன் வாழ்ந்து வரும் மக்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
அப்பகுதி பெண்கள் கழிப்பறை இல்லாததால், அவர்கள் அனுபவித்து வரும் இன்னல்களை எடுத்துரைத்தனர். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும், எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. எங்கள் பிரச்சனைகளை யாரும் கவனிப்பதில்லை. தாழ்வான பகுதியில் இருப்பதால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம், என்று முறையிட்டனர்.

மக்களிடம் பேசிய கமல்ஹாசன், "நான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை. உங்களை சந்தித்து உங்களின் தேவைகள் என்ன என்பதை கேட்க வந்திருக்கிறேன். உங்களின் தேவைகளை நீங்கள் கேட்பது உங்கள் உரிமை. அதை நினைவுப்படுத்துவதே என் கடமை. உங்களுக்கு அடிப்பை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.
சமீபத்தில் கமல்ஹாசனின் காலில் அறுவை சிகிச்சை செய்யப்படாததால், தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், கால் வலி குறைய வாக்கிங் ஸ்டிக் ஐ பிடித்தபடி அவர் கல்லுக்குழி பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது, அங்கிருந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று, அவர் கால் வலி மற்றும் உடல் நிலை குறித்தும் விசாரித்தனர்.
தொழில் நகரமான கோவையில் வளர்ச்சியடைந்த பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு அருகே தான் வார்டு 71- ல் கல்லுக்குழி என்ற பகுதியும் உள்ளது. கழிப்பிட வசதி, கூட இல்லாமல் வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு பொதுக்கழிப்பிட வசதி கூட கிடையாது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், ஆஸ்பட்டால், தகரங்கள் கொண்ட கூரைகளுக்கு கீழ் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
நகரத்தில் உள்ள குப்பைகளை இப்பகுதியில் கொட்டுவது, சுகாதரமான குடிநீர் வசதி இல்லாதது, போன்ற பல பிரச்சனைகளுடன் வாழ்ந்து வரும் மக்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
அப்பகுதி பெண்கள் கழிப்பறை இல்லாததால், அவர்கள் அனுபவித்து வரும் இன்னல்களை எடுத்துரைத்தனர். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும், எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. எங்கள் பிரச்சனைகளை யாரும் கவனிப்பதில்லை. தாழ்வான பகுதியில் இருப்பதால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம், என்று முறையிட்டனர்.
மக்களிடம் பேசிய கமல்ஹாசன், "நான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை. உங்களை சந்தித்து உங்களின் தேவைகள் என்ன என்பதை கேட்க வந்திருக்கிறேன். உங்களின் தேவைகளை நீங்கள் கேட்பது உங்கள் உரிமை. அதை நினைவுப்படுத்துவதே என் கடமை. உங்களுக்கு அடிப்பை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.