நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட வில்லை என கூறி, வரும் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்கப் போவதாக மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட வில்லை என கூறி, வரும் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்கப் போவதாக மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள மிளித்தேன் பகுதியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் தலைவர் தும்பூர் ஐ போஜன், மாநில பொதுச் செயலாளர் குள்ளா கவுடர் வினோதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் தேயிலை மற்றும் மலை தோட்ட காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதியை கொண்டுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதும், இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் கண்காணித்து இவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், தமிழக அரசு வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தொகையினை வழங்க வேண்டும், மேலும் தனியார் தோட்டங்களில் வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்களை விவசாயிகளே வெட்டி விற்க அனுமதி தர வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து விளை நிலங்களுக்கும் தனி பட்டா பாஸ்புக் வழங்க வேண்டும் என தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம். இல்லை என்றால் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைமாவட்ட சிறு விவசாயிகள் நோட்டாவிற்கு வாக்களிப்போம் என முடிவெடுத்து இதனை அனைத்து கிராமங்களுக்கும் சென்று அறிவித்து வருகின்றனர்.
கோத்தகிரி அருகே உள்ள மிளித்தேன் பகுதியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் தலைவர் தும்பூர் ஐ போஜன், மாநில பொதுச் செயலாளர் குள்ளா கவுடர் வினோதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் தேயிலை மற்றும் மலை தோட்ட காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதியை கொண்டுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதும், இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் கண்காணித்து இவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், தமிழக அரசு வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தொகையினை வழங்க வேண்டும், மேலும் தனியார் தோட்டங்களில் வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்களை விவசாயிகளே வெட்டி விற்க அனுமதி தர வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து விளை நிலங்களுக்கும் தனி பட்டா பாஸ்புக் வழங்க வேண்டும் என தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம். இல்லை என்றால் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைமாவட்ட சிறு விவசாயிகள் நோட்டாவிற்கு வாக்களிப்போம் என முடிவெடுத்து இதனை அனைத்து கிராமங்களுக்கும் சென்று அறிவித்து வருகின்றனர்.