சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்பது மோதல்களை ஏற்படுத்தும் என பேரூர் ஆதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் கண்டனம்!

கோவை: சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்பது சாதி மோதல்களுக்கு வழிவகுக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பேரூர் ஆதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்பது சாதி மோதல்களுக்கு வழிவகுக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பேரூர் ஆதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பேரூர் ஆதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் கூறியதாவது;



கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து சமய நம்பிக்கையையும், இந்து கலாச்சாரம், வழிபாட்டு முறை, கோவில்கள், கடவுள்கள், தமிழ் கடவுள் முருகன்,கந்த சஷ்டி கவசம் ஆகியவற்றை இழிவுபடுத்தும் இந்து விரோத சக்திகள், சில அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இது போன்ற இந்து விரோதிகளுக்கு எதிராக இந்துக்கள் ஒருங்கிணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். மேலும், இந்து கோவில்களையும், இந்து கலாச்சாரத்தின் பண்பாட்டையும் பாதுகாக்கின்ற, ஆன்மீகத்தின் மீது பற்று கொண்டு இந்துக்களின் நலன் காக்கும் அரசியல் கட்சிக்கு ஓட்டளிப்போம். வெளிப்படையாக இந்துக்கள் என்று தெரிவிப்பவர்களுக்கு இந்துக்கள் ஓட்டு போடுவார்கள்.

சாதி மறுப்பு திருமணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூபாய் 60 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, தமிழகத்தில் சாதி மோதல்களுக்கு வழிவகுக்கும். இலக்கியம், ஊடகங்கள் வாயிலாக இந்து சமய நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருபவர்களையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் புறக்கணிக்கிறோம்.

கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினர்களுக்கு சலுகைகள் வழங்குகிறார்கள், ஆனால் நம்மை பெரும்பான்மை என்று குறிப்பிடாமல் சிறுபான்மை அல்லாதவர்கள் என்று குறிப்பிடும் நிலையை மாற்ற வேண்டும்”. இவ்வாறு பேரூர் ஆதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் கூறினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...