அதிமுக ஆட்சியில் பெண்களுக்கும்,பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கோவை: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.



கோவை: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.



கிணத்துக்கடவு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து இன்று சுந்தராபுரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;



“எடப்பாடி பழனிச்சாமி தரையில் தவழ்ந்து சென்று சசிகலாவின் கால்களை பிடித்து முதலமைச்சராகி மக்கள் விரோத ஆட்சி நடத்தி விட்டு தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்று பொய் பிரச்சாரம் செய்கின்றார்.

அதிமுக ஆட்சி மீது உள்ள கோபத்தை வருகிற 6ம் தேதி மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குகள் மூலம் காட்ட வேண்டும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று பேசுகிறார்கள் ஆனால் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது.



பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜூன் 3ம்தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளில் கொரோனா நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...