கோவை: கோவை வடிவேலாம் பாளையத்தில் ஒரு ரூபாய்க்கு மிகவும் சுவையான இட்லி வழங்கிய கமலாத்தாள் பாட்டிக்கு தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி நன்றி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை வடிவேலாம் பாளையத்தில் ஒரு ரூபாய்க்கு மிகவும் சுவையான இட்லி வழங்கிய கமலாத்தாள் பாட்டிக்கு தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பதிவு ஒன்றில் கூறியுள்ளதாவது:

தொண்டாமுத்தூர் தொகுதி வடிவேலாம் பாளையத்தில் திருமதி. கமலாத்தாள் அவர்களின் ஒரு ரூபாய் இட்லி கடையில் சாப்பிட்டேன்.

50 வருடங்களாக தான் இந்தக் கடையை நடத்தி வருவதாகவும் சில வருடங்கள் முன்பு வரை 50 பைசாவிற்கு விற்று வந்த இட்லியை மோடி அரசு அடிப்படை உணவு பொருட்களின் மீது செய்த விலையேற்றத்தால் இட்லியை 1 ரூபாய்க்கு விற்றுவருகிறார்.
SP வேலுமணி அவர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் "தீதின்றி வந்த பொருள்" என்ற கூற்றுப்படி தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவரது மகன் விவசாயம் செய்து வருகிறார். காலை 4.30க்கு எழுந்து சமையல் வேலைகளை முடித்து காலை 6.30 மணிக்கெல்லாம் கடையை திறந்து விடுகிறார். காலை 11.30 வரை வியாபாரம் நடக்கிறது.

மிகவும் சுவையான காலை உணவு வழங்கியதற்காக கமலாத்தாள் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. ஒன்றிய செயலாளர் சாமிப்பையன் மற்றும் பகுதி பொறுப்பாளர் சின்ராசு அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
காலை நல்லதொரு உணவுடன் தொடங்கிய நமது பயணம்.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பதிவு ஒன்றில் கூறியுள்ளதாவது:
தொண்டாமுத்தூர் தொகுதி வடிவேலாம் பாளையத்தில் திருமதி. கமலாத்தாள் அவர்களின் ஒரு ரூபாய் இட்லி கடையில் சாப்பிட்டேன்.
50 வருடங்களாக தான் இந்தக் கடையை நடத்தி வருவதாகவும் சில வருடங்கள் முன்பு வரை 50 பைசாவிற்கு விற்று வந்த இட்லியை மோடி அரசு அடிப்படை உணவு பொருட்களின் மீது செய்த விலையேற்றத்தால் இட்லியை 1 ரூபாய்க்கு விற்றுவருகிறார்.
SP வேலுமணி அவர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் "தீதின்றி வந்த பொருள்" என்ற கூற்றுப்படி தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவரது மகன் விவசாயம் செய்து வருகிறார். காலை 4.30க்கு எழுந்து சமையல் வேலைகளை முடித்து காலை 6.30 மணிக்கெல்லாம் கடையை திறந்து விடுகிறார். காலை 11.30 வரை வியாபாரம் நடக்கிறது.
மிகவும் சுவையான காலை உணவு வழங்கியதற்காக கமலாத்தாள் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. ஒன்றிய செயலாளர் சாமிப்பையன் மற்றும் பகுதி பொறுப்பாளர் சின்ராசு அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
காலை நல்லதொரு உணவுடன் தொடங்கிய நமது பயணம்.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.