தொண்டாமுத்தூர் தொகுதியில் தந்தை எஸ்.பி.வேலுமணிக்காக மகள் உருக்கம்!

கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக அவரது மகள் உருக்கமாக பரப்புரை மேற்கொண்டார்.


கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக அவரது மகள் உருக்கமாக பரப்புரை மேற்கொண்டார்.

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியுடன் அவரது மகள் வந்தனா என்கிற சாரங்கி பரப்புரையில்ஈடுபட்டார். 10-ம் வகுப்பு மாணவியான இவர் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடையே அமைச்சர் வேலுமணி மகள் வந்தனா பேசியதாவது;

"கொரோனா‌ நோய் அதிகமாக பரவிட்டு இருந்தப்ப வீடு வீடாகப் போய் உதவி செஞ்சது அப்பா தான்.‌ எல்லா வீட்டுக்கும் தேவையான அரிசி பருப்பு மளிகை சாமான் காய்கறி எல்லாம் அனுப்பி வச்சாரு. அவர் எப்படி உதவி செய்வார்னு உங்களுக்கே நல்லா தெரியும். அவரு உங்க குடும்பத்துல ஒருத்தரா எப்பவும் உதவி செய்வாரு.‌ இப்ப நாலாவது முறையா தேர்தலில்ல போட்டி போடறாரு. உங்க குடும்பத்துல ஒருத்தரா நெனைச்சு அவரை ஜெயிக்க வைக்கணும்.



கோவை நகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏகப்பட்ட வேலை செஞ்சு தந்திருக்காங்க. தார் ரோடு, பாலம் என அப்பா நிறைய வேலை முடிச்சு தந்திருக்கிறாரு. அப்பா உள்ளாட்சித் துறையில் அமைச்சராக இருந்த அஞ்சு வருஷத்துல அம்பது வருஷத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேத்திட்டாரு. உங்களில் ஒருத்தரா நினைச்சு அவரை இந்த தேர்தலில் ஜெயிக்க வைக்கணும்.” இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்மகள் உருக்கமாக பேசியது அனைவரையும் கவர்ந்தது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...