திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகரிக்கும் என அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பரப்புரை!

கோவை; திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகரித்துவிடும். எனக்கூறி கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பரப்புரையில் ஈடுபட்டார்.


கோவை: திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகரித்துவிடும். எனக்கூறி கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பரப்புரையில் ஈடுபட்டார்.



கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் கணபதி, சங்கனூர் சாலை, கணபதி மார்க்கெட் உட்பட பல்வேறு பகுதிகளில் பரபரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையின் போது அம்மன் அர்ச்சுனன் பேசியதாவது:

“திமுக ஆட்சி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மின் வெட்டு. அடுத்து பெண்களை இழிவாக பேசுவது தான், இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபகாலமாக திமுகவினரின் செயல்கள் இருக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும். நில அபகரிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் மத மோதல்களும் நடக்கவில்லை.



தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எளிமையானவர். அவரை பொதுமக்கள் எளிதாக அணுகலாம். கோவை மாவட்டம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கண்டுள்ளது. இதற்காக அமைச்சர் எஸ். பி. வேலுமணி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மத்திய அரசின் உதவி இருந்தால்தான் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும், ஆதலால் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுடன் இணக்கமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால்தான் தமிழகத்துக்கு இத்தனை வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர முடிந்தது. நான் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த போது உக்கடம் வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டன. அதுபோல வடக்கு தொகுதிகளும் மேலும் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன்.” இவ்வாறு அம்மன் அர்ஜுனன் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...