கோவை: நீட் தேர்வை கொண்டு வந்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்து மாணவர்களை தற்கொலைக்கு தள்ளிய பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதியில் வாலிபர் சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.
கோவை: நீட் தேர்வை கொண்டு வந்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்துமாணவர்களை தற்கொலைக்கு தள்ளிய பாஜகவை புறக்கணிக்க வேண்டும் எனகோவை தெற்கு தொகுதியில் வாலிபர் சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.
திமுக தலைமையிலான கூட்டணியின் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மயூராஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தெற்கு தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக வியாழனன்று தெருமுனை பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின்குமார் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் வாலிபர் சங்க செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
வாலிபர் சங்கத்தின் தலைவர்கள் பேசுகையில்,
“மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களின் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக தமிழகம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட கட்டமைப்பில் வலுவாக உள்ளது.
இதன்காரணமாக இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவ கல்லூரிகள்தமிழகத்தில் உள்ளன. இதனால் கிராமப்புற ஏழைஎளிய மாணவர்கள் மருத்துவர்களாக உயர்ந்தனர். இதனை சீர்குலைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மத்திய பாஜக அரசு நீட்தேர்வை கொண்டுவந்து மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்தது. ஏரளாமான மாணவர்களை தற்கொலைக்கு தள்ளியது.
மாநில உரிமையை தொடர்ந்து பறித்து வருவது, ஜிஎஸ்டி வரியால் சிறுகுறு தொழில்களை அழித்தது என தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சியாக பாஜக அரசு உள்ளது. இந்த சர்வாதிகார மக்கள் விரோத கட்சிகளுக்கு காவடி தூக்கும் வேலையை மாநில அதிமுக செய்து வருகிறது. கோவையின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்கிற வெளிநாட்டு நிறுவனத்திடம் தாரை வார்த்த அதிமுக பாஜக கூட்டணியை வீழ்துவது இளைஞர்களின் பிரதான கடமை” என வலியுறுத்தினர்.