கோவை: சி-விஜில் எனும் தேர்தல் ஆணையத்தின் மொபைல் செயலியில் கோவை மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட 503 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கோவை: சி-விஜில் எனும் தேர்தல் ஆணையத்தின் மொபைல் செயலியில் கோவை மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட 503 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர்களிடம் இருந்து புகார்களைப் பெற கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது. தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தின் 1800 425 4757 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் கொடுத்தல், தேர்தல் விதிமுறைமீறல்கள் குறித்து புகார்கள் பெறப்பட்டன.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக பெறப்பட்ட 193 புகார்களில் 124 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டன. 66 புகார்கள் ஆதாரம் இல்லாத தால் நிராகரிக்கப்பட்டன. மேலும் 3 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே போல் தேர்தல் விதிமீறல்களை மொபைல் வழியாக புகைப்பட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க சி-விஜில் எனும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட இந்த செயலியின் வழியே 688 புகார்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் 503 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டன. 163 புகார்கள் நிராகரிக்கப்பட்டன. 2 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர்களிடம் இருந்து புகார்களைப் பெற கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது. தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தின் 1800 425 4757 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் கொடுத்தல், தேர்தல் விதிமுறைமீறல்கள் குறித்து புகார்கள் பெறப்பட்டன.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக பெறப்பட்ட 193 புகார்களில் 124 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டன. 66 புகார்கள் ஆதாரம் இல்லாத தால் நிராகரிக்கப்பட்டன. மேலும் 3 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே போல் தேர்தல் விதிமீறல்களை மொபைல் வழியாக புகைப்பட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க சி-விஜில் எனும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட இந்த செயலியின் வழியே 688 புகார்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் 503 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டன. 163 புகார்கள் நிராகரிக்கப்பட்டன. 2 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.