கேரள முதல்வர் பினராயி விஜயனின் கள்ளப்பணத்தை கமல்ஹாசன் செலவழித்து வருகிறார் - கோவையில் தேவநாதன் யாதவ் பரப்புரை

கோவை: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கள்ளப்பணத்தை கமல்ஹாசன் செலவழித்து கொண்டுள்ளார், என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ், கோவையில் தெரிவித்துள்ளார்.



கோவை: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கள்ளப்பணத்தை கமல்ஹாசன் செலவழித்து கொண்டுள்ளார், என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ், கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை காட்டூர் பகுதியில், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், வானதி சீனிவாசனுக்கு வாக்களிப்பது, நரேந்திர மோடிக்கு நேரடியாக வாக்களிப்பது போல எனத் தெரிவித்தார்.

மேலும், மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நடிக்க தான் தெரியும் எனவும், கமல்ஹாசனுக்கு வாக்களிப்பது என்பது வாக்கரசி போடுவது போல எனவும் அவர் கூறினார்.

கமல்ஹாசன் குடும்பத்தை கூட நடத்த தெரியாதவர் எனவும், ஒரு மனைவியை கூட காப்பாற்ற முடியாதவர் எனவும் கூறிய அவர், 3 மனைவிகளுடனும் வாழ முடியவில்லை என்றால், யார் மீது தவறு என கேள்வி எழுப்பினார். கமல்ஹாசன் நிர்வாகம் தெரியாதவர். தனிநபர் ஒழுக்கம் இல்லாதவர் எனவும், கமல்ஹாசன் வக்கிரப்புத்தி கொண்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கள்ளப்பணத்தை கமல்ஹாசன் செலவழித்து கொண்டுள்ளார் எனவும், தேர்தல் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...