கோவை: கோவையில் வன்னியர் சமூக மக்களின் பல ஆண்டு கோரிக்கையான உள் இட ஒதுக்கிட்டை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் வன்னியர் சமூக மக்களின் பல ஆண்டு கோரிக்கையான உள் இட ஒதுக்கிட்டை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் வன்னியர் சங்கத்தினர் அனைவரும் அஇஅதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடன் களப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் சேர்த்து தங்கள் சங்கத்தினர் மட்டும் 1 லட்சம் பேருக்கு மேலாக இருக்கிறார்கள். எங்கள் ஆதரவு முழுவதும் அதிமுக கூட்டணிக்கு தான் என்றனர்.
மேலும், தங்களுக்கு கிடைத்த உள் ஒதுக்கீட்டை பெற்றுத்தந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அண்புமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தங்கள் சமூகத்திற்கான உள் ஒதுக்கீட்டுக்காக தங்களுக்காக ஆதரவாக பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, இன்று கோவை வர உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து உள்ஒதுக்கீடு வழங்கியதற்கான தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இன்னும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் வன்னியர் சங்கத்தினர் அனைவரும் அஇஅதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடன் களப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் சேர்த்து தங்கள் சங்கத்தினர் மட்டும் 1 லட்சம் பேருக்கு மேலாக இருக்கிறார்கள். எங்கள் ஆதரவு முழுவதும் அதிமுக கூட்டணிக்கு தான் என்றனர்.
மேலும், தங்களுக்கு கிடைத்த உள் ஒதுக்கீட்டை பெற்றுத்தந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அண்புமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தங்கள் சமூகத்திற்கான உள் ஒதுக்கீட்டுக்காக தங்களுக்காக ஆதரவாக பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, இன்று கோவை வர உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து உள்ஒதுக்கீடு வழங்கியதற்கான தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இன்னும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.