உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்

நீலகிரி: இன்னும் வாக்கு பதிவிற்கு ஐந்தே நாட்கள் உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.


நீலகிரி: இன்னும் வாக்கு பதிவிற்கு ஐந்தே நாட்கள் உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பரப்புரையின் போது, எடப்பாடி பழனிச்சாமி கூடலூருக்கு ஹெலிகாப்டர் மூலம் வருவதாக தகவல் அறிந்தேன். அவர் வர வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், இதே நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது, ஏன் இதே ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், நீலகரி நிலச்சரிவு ஏற்பட்ட போது நான் வந்து பார்வையிட்டேன். அப்போது, நிவாரண நிதியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ ராசா, திருச்சி சிவா, மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தோம், என்றார்.

கருத்துக்கணிப்புகள் குறித்து பேசிய ஸ்டாலின், அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக பெருவாரியான வெற்றி பெரும் என்று சொல்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா, புதிய தலைமுறை, தந்தி, தி இந்து போன்ற ஊடகங்கள் திமுக வெற்றி பெறும் என்று சொல்கிறது. அந்த ஊடகங்களை அதிமுக அரசு மிரட்டியும், அரசு கேபிள்களில் இருந்து நீக்கியும் வருகிறது. ஆனால், இது நீடிக்காது மே 2 க்குப் பிறகு கதையே வேறு, என்று ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து பேசிய, மு. க. ஸ்டாலின், முதல்வர் பழனிச்சாமியை உதவாக்கரை என்றும், தவழ்ந்து போறதுல கில்லாடி என்றும் விமர்சித்தார். இதைச் சொன்னால் நான் என்ன பாம்பா, பல்லியா என கேட்கிறார். பாம்பு, பல்லி கிட்ட கூட விஷம் கம்மியா தான் இருக்கும், ஆனால் பழனிச்சாமி போன்ற துரோகிகளிடம் விஷம் அதிகமா இருக்கும், என்று காட்டமாக விமர்சித்தார் ஸ்டாலின்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...