கோவை: வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பணம், பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவை: வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பணம், பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருப்பினும் பணப்பட்டுவாடாவை நவீன முறையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் டீம், ஜிபே (G-Pay) மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
அதற்கேற்ப, இன்று தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தெலுங்குபாளையம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் புகைப்படம், போன் நம்பர், மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்களை பெற முயற்சி செய்த நபர்களை பிடித்து போலீசாரிடம், திமுகவினர் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பேப்பரில், பெண்கள் மற்றும் ஆண்களின் தொலைபேசி எண்கள் காணமுடிகிறது. தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்ததால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.
இது சம்பந்தபட்ட வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கார்த்திகேய சிவசேனாபதி, தேர்தல் ஆணையம் அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இருப்பினும் பணப்பட்டுவாடாவை நவீன முறையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் டீம், ஜிபே (G-Pay) மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
அதற்கேற்ப, இன்று தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தெலுங்குபாளையம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் புகைப்படம், போன் நம்பர், மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்களை பெற முயற்சி செய்த நபர்களை பிடித்து போலீசாரிடம், திமுகவினர் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பேப்பரில், பெண்கள் மற்றும் ஆண்களின் தொலைபேசி எண்கள் காணமுடிகிறது. தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்ததால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.
இது சம்பந்தபட்ட வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கார்த்திகேய சிவசேனாபதி, தேர்தல் ஆணையம் அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.